Home இலங்கை பொருளாதாரம் இலங்கைக்கு வந்து குவிந்த இந்திய சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த இந்திய சுற்றுலாப் பயணிகள்

0

இந்த வருடத்தின் மே மாதம் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 10 இலட்சத்து 17,004 சுற்றுலாப்பயணிகள் குறித்த காலப்பகுதியில் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது.

அத்துடன் மே மாதத்தின் 28 நாட்களில் மாத்திரம் 120,120 சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் 

கடந்த வருடம் இதே மாதம் 112,128 சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

மே மாதத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்து வந்துள்ளதுடன் அவர்களின் எண்ணிக்கை 42,899 ஆகும்.

மேலும் பிரித்தானியாவிலிருந்து 8,382 சுற்றுலாப்பயணிகளும், சீனாவிலிருந்து 7,965 சுற்றுலாப்பயணிகளும் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இதேவேளை, ஜேர்மனி, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version