செம்மணி சிந்துபாத்தியில் அகழ்ந்தெடுக்கப்படும் மனித உடலங்களுக்கு அருகில் எந்தவொரு ஆடைகளும், அணிகலன்கனும் அடையாளம் காணப்படவில்லை என சட்டத்தரணி ரணித்தா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“மேலும் இந்தவழக்கு தொடர்பான பிரதேசத்தை சந்தேகத்திற்குரிய மனித புதைக்குழியாக பிரகடனப்படுத்துவதற்கு சட்டத்தரணிகளால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இதற்கிணங்க நீதிமன்றதால் குறிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.
