Home இலங்கை சமூகம் றீ(ச்)ஷாவில் நடைபெறவுள்ள மாபெரும் இரத்த தான முகாம்

றீ(ச்)ஷாவில் நடைபெறவுள்ள மாபெரும் இரத்த தான முகாம்

0

கிளிநொச்சி (Kilinochci) – இயக்கச்சி பகுதியில் உள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் மாபெரும் இரத்த தான முகாம் ஒன்று நடைபெற உள்ளது.

குறித்த இரத்த தான முகாம் நாளையதினம்(22.03.2025) சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை நடைபெறவிருக்கின்றது.

தற்போது வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் இரத்தத்திற்கு பாரிய பற்றாக்குறை நிலவி வருகின்றது.

உயிர் காக்கும் கொடை

இவ்வாறான நிலையில், உங்களின் இரத்த தானம் ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு உயிர் காக்கும் கொடையாக மாற வாய்ப்புள்ளது.

றீ(ச்)ஷாவில் இடம்பெறும் இரத்த தான முகாம் குறித்து அறிய ‘0777772353’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.  

NO COMMENTS

Exit mobile version