Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கை

மட்டக்களப்பில் பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கை

0

மட்டக்களப்பில் காத்தான்குடி,
மண்முனை பிரதேசங்களில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாரிய
சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்னாய்க்க தெரிவித்துள்ளார்.

இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 50 பொலிஸார் மற்றும் 6 விசேட அதிரடிப்படையினர்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சோதனை நடவடிக்கை

இதன்போது பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முக்கிய கேந்திர
நிலையங்களில் இச்சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்த சந்தர்ப்பத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடிய, ஹெல்மெட் அணியாத, கண்ணாடிகள் பொருத்தப்படாத 9 மோட்டார்
சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

கைப்பற்றப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருட்களுடன் கைதானவர்கள்

இந்த நடவடிக்கைகளின் போது போதையில் வாகனம் செலுத்திய மூவர்
கைது செய்யப்பட்டுள்ளதுடன், தேடப்பட்டு வந்த நான்கு
நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இருவரும், கஞ்சாவை வைத்திருந்த மூவருமாக ஏழு பேர் போதைப்பொருட்களுடன் கைதாகியுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version