மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி கோயில் கும்பாபிஷேகம் எதிர்வரும் 11ஆம் திகதி
நடைபெறவுள்ள நிலையில், பூர்வாங்க கிரியைகள் ஆலயத்தில் இன்று(09.04.2025) நடைபெற்றுள்ளன.
பூர்வாங்க கிரியைகளிலும் பெரும் தொகையான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்
பெருமானின் நல் அருளை பொற்றுக்கொள்ளவதை காணக் கூடியதாகவுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க மாவை கந்தனின் கும்பாபிஷேக பெருவிழாவை மக்கள் 3
தசாப்தத்திற்கு மேல் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
கும்பாபிசேக கிரியைகள்
ஈழ தேசத்திலும் புலம்பெயர்
தேசத்திலும் வாழ்கின்ற மாவை கந்தனின் அருள் வேண்டி செல்வதை காணக் கூடியதாக
இருக்கின்றது.
இன்றையதினம் தருமபுரம் ஆதீனம்
ஶ்ரீலஶ்ரீ 27ஆவது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாசாரிய
சுவாமி, மாவை கந்தனின் கும்பாபிசேக கிரியைகள் வழிபாடுகளில் கலந்து
கொண்டிருந்தார்.
