Home இலங்கை அரசியல் ஊழல்மிக்க அரசியல்வாதிகளின் கடன் சுமையை மக்கள் சுமக்க வேண்டியதில்லை: மே தினத்தில் அறைகூவல்

ஊழல்மிக்க அரசியல்வாதிகளின் கடன் சுமையை மக்கள் சுமக்க வேண்டியதில்லை: மே தினத்தில் அறைகூவல்

0

இலங்கை நாட்டின் ஊழல்மிக்க அரசியல்வாதிகள் வெளிநாட்டு நிதி வழங்கும்
நிறுவனங்களிடமிருந்து பெற்ற சுமார் 2 பில்லியன் டொலர்களுக்கு
மேற்பட்ட பெருந்தொகைப் பணத்தின் கடன் சுமையை நாட்டு மக்கள்
செலுத்த வேண்டியதில்லை என மேதினக் கூட்டத்தில் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள பல்வேறு தொழிற் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மேதின
ஊர்வலமும் பொதுக் கூட்டமும் கொழும்பு (Colombo) – அல்விஸ் பிரதேசத்திலுள்ள ஸ்டான்லி ஜேம்ஸ்
மைதானத்தில் நேற்று (01.05.2024) இடம்பெற்றுள்ளது.

பாரிய கடன் சுமை

இதன்போது கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாணப் பிரதிநிதி நிஹால் அஹமட்,

“நாட்டு மக்களைக் காட்டி பெருந்தொகைப் பணத்தை சர்வதேச நிதி வழங்கும்
நிறுவனங்களிடமிருந்து கடனாகப் பெற்ற ஊழல் அரசியல்வாதிகள் கடன் சுமையை மக்கள்
மீது சுமத்தி விட்டார்கள்.

அதனால் மக்களுக்கு இப்பொழுது சொல்ல முடியாத துன்பமும் துயரமும் வறுமையும்
தாண்டவமாடுகிறது.

எனவே, தொழிலாளர்களின் நாளாந்த உழைப்பில் 80 வீதமான உழைப்பு, ஊழல் அரசியல்வாதிகள் பெற்ற கடன் செலுத்துவதற்கான
வரிப்பணமாகவே செல்லுகின்றன. இதனை நாம் நிறுத்த வேண்டும்.

இலங்கை மக்களுக்கான பணம் என்று ஊழல்வாதிகளிடம் கடன் வழங்கிய
நிதிநிறுவனங்கள் வழங்கிய பணத்தை மக்களிடமிருந்து அறவிடுவதை
நிறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் பிரதிநிதி கே. நிஹால் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமிருந்து
பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் பொது சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்குபற்றியுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/may-day-meeting-in-colombo-1714648717

NO COMMENTS

Exit mobile version