Home இலங்கை சமூகம் மாத்தளையில் இடம்பெற்ற மே தின பேரணி…!

மாத்தளையில் இடம்பெற்ற மே தின பேரணி…!

0

நாடளாவிய ரீதியில் மே தின நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் மாத்தளை மாவட்டத்தில் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியினால் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணியில் கலந்து கொண்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை நாட்டிலே உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவும் அவர்களுடைய அதிகாரத்தை முன்னிறுத்தி அரசியல் செய்கின்ற ஆட்சியாளர்கள் தங்களுடைய இருப்புக்காகவும் கொள்கைக்காகவும் இந்த நாட்டினுடைய வளங்களை விற்று மக்களை இன்று நடுத்தெருவில் விட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே இன்று (01) உழைக்கும் மக்களுடைய தினத்தை கொண்டாடுகின்றோம்“ என தெரிவித்துள்ளார்.

 

Source: https://ibctamil.com/article/may-day-rally-held-in-matale-1714557847

NO COMMENTS

Exit mobile version