Home இலங்கை குற்றம் மேர்வின் சில்வாவுக்கு பிணை

மேர்வின் சில்வாவுக்கு பிணை

0

 முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மேலும் இரண்டு பேருக்கு, கம்பஹா உயர் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.கே.டி. விஜேகூன் அவர்களால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான காணியை, சட்டவிரோதமாக தனியார் தரப்புக்கு விற்பனை செய்ததாக குற்றச்சாட்டின் கீழ், குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) இவர்களை கடந்த நாட்களில் கைது செய்திருந்தது.

நீதிமன்றத்தில் முன்னிலை

இந்த வழக்கில் சந்தேகநபர்களாக இருந்த மூவரும், இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
குறித்த மூவரும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

[]

இந்நிலத்தின் பரிமாற்றம் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. 

NO COMMENTS

Exit mobile version