Home இலங்கை சமூகம் மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்த லொறி

மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்த லொறி

0

மட்டக்களப்பில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் மதில் ஒன்றை உடைத்துக்கொண்டு வளவுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மட்டக்களப்பு (Batticaloa) – களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் நேற்றிரவு விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இப்பிரதேசத்தில் மழையுடனான வானிலை நிலவி வரும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கல்முனை சாலை வழியே குருநாகலில் இருந்து மருதமுனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறிய ரக லொறி ஒன்று செட்டிபாளையம் பிரதான வீதியால் பயணிக்கும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் மதில் ஒன்றை உடைத்துக்கொண்டு வளவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளது.

மருதமுனை வெதுப்பகம் ஒன்றிற்கு சொந்தமான வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனத்தில் விபத்து சம்பவித்த சமயம் மருதமுனையைச் சேர்ந்த இருவர் பயணித்துள்ளதுடன் தெய்வாதீனமாக அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

வீட்டு மதிலும் வீட்டின் சில உடமைகளுக்கும் சேத மேற்பட்டுள்ளதுடன் லொறியின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version