Home இலங்கை சமூகம் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் !

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் !

0

இலங்கைக்கு (Sri Lanka) திரும்ப முயற்சிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், காலாவதியான கடவுச்சீட்டுகளை புதுப்பிப்பதில் சிக்கல்களை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக, இலங்கைக்கு திரும்ப முயற்சிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

அத்தோடு, பல இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தேர்தலுக்கு வர ஆர்வமாக உள்ளதாகவும் இருப்பினும் காலாவதியான கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை புதுப்பிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிலையில் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு ஊழல் பேரங்களே முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version