பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அகில இலங்கை உணவகங்கள் மற்றும் விடுதிகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ருக்ஷான் ஹர்ஷன தெரிவித்துள்ளார்.
பால்மா விலை அதிகரிப்பு
பால்மா இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்படும் பால்மா பாக்கெட்டின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, 400 கிராம் பொதியொன்று 100 ரூபாவாலும், ஒரு கிலோ பால்மா பொதியொன்று 250 ரூபாவாலும் விலை உயர்த்தப்படவுள்ளதாக இறக்குமதியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
