சீரற்ற வானிலை காரணமாக 38 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த எண்ணிக்கை 24 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை
இதன் காரணமாக நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
நாட்டின் அவசரகால பேரிடர் காரணமாக மின்சார துறையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதே அமைச்சர் குமார ஜெயக்கொடி நேற்று (03) நாடாளுமன்றத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
