Home இலங்கை குற்றம் மட்டக்களப்பில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

0

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காணாமல் கிரான்குளத்தைச் சேர்ந்த கூலி
தொழிலாளி இன்று (03) மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு
அருகிலுள்ள தேவாலயத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி
பொலிசார் தெரிவித்தனர்.

கிரான்குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ஜயாத்துரை பத்மநாதன் என்பவரே
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் விசாரணை 

கூலி தொழிலை மேற்கொண்டு வரும் குறித்த நபர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர்
வழமைபோல வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் மீண்டும் வீடு திரும்பாத
நிலையில் அவரை உறவினர்கள் தேடிவந்தனர்.

இந்த நிலையில் குறித்த நபர் கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள தேவாலயத்துக்கு
அருகில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாதாக பொலிசாரின் ஆரம்பகட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில்
ஒப்படைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை
முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பெரிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version