Home இலங்கை சமூகம் முன்னாள் அமைச்சருக்கு பேரிடியாக மாறிய மகிந்த மீதான விசுவாசம்

முன்னாள் அமைச்சருக்கு பேரிடியாக மாறிய மகிந்த மீதான விசுவாசம்

0

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் (BOI) முன்னாள் இயக்குநர் ஜெனரல் ஜெயந்த எதிரிசிங்க ஆகியோர் மீது, பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு, நவம்பர் 19, 2014 அன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவிக்கால பதவியேற்பு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 11 செய்தித்தாள்களில் விளம்பரங்களை வெளியிடுவதற்காக முதலீட்டு சபையின் நிதியிலிருந்து ரூ. 17 மில்லியனுக்கும் அதிகமான தொகையை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

குற்றச்சாட்டு

இதன்படி, குறித்த நடவடிக்கையானது, அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும், லஞ்ச ஒழிப்புச் சட்டத்தை மீறியதாகவும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

 

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, 15 சாட்சிகள் மற்றும் 21 ஆவணப் பொருட்கள் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version