Home இலங்கை சமூகம் இந்த வருடத்தில் ஆயிரக்கணக்கானோர் தொழிலுக்காக கொரியாவிற்கு பயணம்

இந்த வருடத்தில் ஆயிரக்கணக்கானோர் தொழிலுக்காக கொரியாவிற்கு பயணம்

0

2024 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களில் மாத்திரம் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரியாவிற்கு வேலைகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 4 மாதங்களில் 2,064 பேர் தென் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, உற்பத்தித் துறை தொடர்பான வேலைகளுக்காக 1708 பேர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது வாழ்க்கையில் சந்திரிக்கா விட்ட வரலாற்று தவறு!

கட்டுமானத் துறை

அத்துடன் மீன்பிடித் துறைக்கு 351 பேரும், கட்டுமானத் துறைக்கு 5 பேரும் தென்கொரியாவுக்குச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் 1,892 பேர் முதல் முறையாக தென் கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் 41 யுவதிகளும் தென்கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு இந்திய – இலங்கை ஒப்பந்தம் தேவை: வேண்டுகோள் விடுத்த திலகராஜா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

NO COMMENTS

Exit mobile version