Home இலங்கை குற்றம் யாழில் மர்மநபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்!

யாழில் மர்மநபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்!

0

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் வீடு ஒன்றில்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வன்முறை குழு ஒன்று தீயிட்டு
எரித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (9) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உரும்பிராய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட் மோட்டார்
சைக்கிளை, வீட்டுக்கு வருகை தந்த வன்முறை கும்பல் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.

மேலதிக விசாரணை

இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்தநிலையில்
சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version