Home இலங்கை சமூகம் தண்டவாளங்களை ஏற்றிச் செல்லும் தொடருந்து தடம் புரண்டதால் மலையக தொடருந்து சேவை பாதிப்பு

தண்டவாளங்களை ஏற்றிச் செல்லும் தொடருந்து தடம் புரண்டதால் மலையக தொடருந்து சேவை பாதிப்பு

0

தண்டவாள தொடருந்து தடம் புரண்டதால்,
மலையக தொடருந்து சேவை போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக நாவலப்பிட்டி தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

ஹட்டன் மற்றும் ரொசெல்ல தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான 105 ½ மைல் கல் அருகே (05) காலை 10:00 மணியளவில் மலையக தொடருந்து பாதையை பழுதுபார்ப்பதற்காக தொடருந்து தண்டவாளங்களை தொடருந்து ஏற்றிச் சென்றுள்ளது. 

சீர் செய்யும் பணி

உலபனையிலிருந்து கொட்டகலைக்கு தொடருந்து தண்டவாளங்களை ஏற்றிச் செல்லும் அந்த தண்டவாள
தொடருந்து இயந்திரமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

தண்டவாள தொடருந்து குழுவினர் குறித்த தொடருந்து இயந்திரத்தை சீர் செய்யும் பணியைத்
தொடங்கியுள்ளனர்.

தடம் புரண்ட தண்டவாள தொடருந்து இயந்திரம் சீர் செய்யும் வரை, பதுளையிலிருந்து
கொழும்புக்கு செல்லும் தொடருந்துகள் ஹட்டன் தொடருந்து நிலையத்தில் இருந்து திருப்பி
அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

அத்துடன், கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்லும் தொடருந்துகள் ரொசெல்லவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் என்றும் ஹட்டன் தொடருந்து நிலைய
பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version