Home விளையாட்டு தோனிக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி: காலக்கெடு விதித்துள்ள பிசிசிஐ

தோனிக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி: காலக்கெடு விதித்துள்ள பிசிசிஐ

0

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு(MS.Dhoni) எதிராக ரூ.15 கோடி மோசடி தொடர்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதியில் வசிக்கும் ராஜேஷ் குமார் மௌர்யா என்பவரால் பிசிசிஐ(BCCI) நெறிமுறை ஆணைக்குழுவுக்கு இந்த புகார் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரானது, தோனி மீது ராஞ்சியில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படும் ரூ.15 கோடி மோசடி வழக்கு தொடர்பானது.

தோனி

இந்த வழக்கில் தோனியின் முன்னாள் வணிக பங்குதாரர்களான மிஹிர் திவாகர், சௌம்யா தாஸ் மற்றும் Aarka Sports Management Pvt Ltd ஆகியோருக்கு எதிராக மோசடி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ராஞ்சி சிவில் நீதிமன்றத்தில் 2024 மார்ச் 20 அன்று இந்த வழக்கின் தொடக்க விசாரணையில் வழக்கு முதன்மையானதாக கருதப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றம் மிஹிர் திவாகர் மற்றும் மற்ற குற்றவாளிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

காலகெடு

பிசிசிஐ நெறிமுறை ஆணைக்குழு, இந்த விவகாரம் குறித்து மகேந்திர சிங் தோனியிடம் ஓகஸ்ட் 30ஆம் திகதிக்குள் பதில் அளிக்க கேட்டுள்ளது.

மேலும் புகார் அளித்த ராஜேஷ் குமார் மௌர்யாவை செப்டெம்பர் 16ஆம் திகதிக்குள் பதில் அளிக்க கேட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version