Home இலங்கை குற்றம் கனடாவில் வேலை வாங்கித்தருவதாக பல மில்லியன் ரூபாய் மோசடி

கனடாவில் வேலை வாங்கித்தருவதாக பல மில்லியன் ரூபாய் மோசடி

0

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி இலங்கையர்களிடம் 5.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற தோட்ட மேலாளரான சந்தேக நபர், கனடாவில் வேலை வாங்கித் தருவதாக காலி மற்றும் நிக்கவெரட்டியவில் வசிக்கும் நான்கு நபர்களிடமிருந்து தலா 1.3 மில்லியன் ரூபாய் மோசடி செய்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் வேலை வாங்கித்தருவதாக மோசடி

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில்,  வாரக்காபொல, அம்பகலகந்தாவில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில், சைப்ரஸில் வேலைக்கான மூன்று ஒப்பந்தங்களையும் அவரது வீட்டிலிருந்து தலா 75,000 ரூபாய் பணத்தினையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதற்கிடையில், சுவிட்சர்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இலங்கையர்களிடம் 1.7 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒரு பெண்ணும் (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version