Home இலங்கை சமூகம் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை: கொழும்பில் சம்பவம்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை: கொழும்பில் சம்பவம்

0

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (05.04.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

60 வயது பெண் பாதிப்பு

சம்பவத்தில் கிராண்ட்பாஸ், முவதொர உயன பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தன்று கணவருக்கும், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த 26 வயதுடைய இளைஞர் தகராறை சமரசம் செய்த முயன்றுள்ளார்.

பின்னர் சந்தேகநபரான கணவன் தனது மனைவியையும், சமரசம் செய்த முயன்ற இளைஞனையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி பலமாக காயப்படுத்தியுள்ளார்.

மனைவி உயிரிழப்பு

காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேகநபரான கணவன் பிரதேசத்தைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version