Home இலங்கை சமூகம் மீண்டும் ஆரம்பித்த காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் போக்குவரத்து சேவை

மீண்டும் ஆரம்பித்த காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் போக்குவரத்து சேவை

0

காங்கேசன்துறைக்கும் (Kangesanthurai) நாகப்பட்டினத்திற்கும் (Nagapattinam) இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், எதிர்வரும் 22 ஆம் திகதி கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை
கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி (Sundararaj Ponnusamy) தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், எதிர்வரும் 22 ஆம் திகதி  காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து
பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும்
பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து
நாகபட்டினத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு 

www.sailsubham.com என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பயணச்சீட்டுகளை பதிவு
செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்திற்கு ஆறு நாட்கள் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version