Home இலங்கை சமூகம் இளைஞர்களுக்கு நீதி வேண்டி நயினாதீவில் வெடித்த போராட்டம்

இளைஞர்களுக்கு நீதி வேண்டி நயினாதீவில் வெடித்த போராட்டம்

0

யாழ்பாணம் (Jaffna) – நயினாதீவைச் (Nainativu) சேர்ந்த பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டமானது, நயினாதீவு இறங்குதுறையில் மணல் ஏற்றி – இறக்கும் தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நீதி வேண்டியே இன்றைய தினம் (28.04.2025) இவ்வாறு கவன ஈர்ப்பில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் (26.04.2025) மணல் ஏற்றி இறக்கும் இறங்குதுறையில் தொழிலாளிகளுக்கும் தொழில் வழங்குனருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி இருந்தது.

முறுகல் நிலை

இதனைத் தொடர்ந்து இருதரப்பினரும் இடையில் தொடர்ந்து முறுகல் நிலை ஏற்பட்டிருந்த நிலையில் தொழிலாளி ஒருவர் காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில் தொழிலாளிகளின் உறவினர்கள் அவருடன் முரண்பாட்டில் ஈடுபட்டு இருந்தவர்களில் இருவரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 

காவல்நிலையத்தில் இருதரப்பினராலும் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் காணாமல் போன மற்றும் ஒரு தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த இருவரும் சம்பந்தப்பட்டவர்களால் விடுவிக்கப்பட்டனர்.

தற்பொழுது தொழிலாளிகள் தரப்பைச் சேர்ந்த எட்டு பேர் ஊர்கார்த்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், காவல்துறையினர் பக்கச்சார்பாக நடப்பதாகவும் இதற்கு நீதி கோரியும் ஊர்காவல்துறை இறங்குதுறையில் இவ்வாறு இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

you may like this


https://www.youtube.com/embed/fT7gBJ9zfEk

NO COMMENTS

Exit mobile version