Home இலங்கை சமூகம் கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

0

கொழும்பு வடக்கு பகுதிகளில் பல தொடர் மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள் ஆபத்தான நிலையில் வாழ்வதாகவும் சில தொடர்மாடி குடியிருப்புக்கள் உடைந்து விழும் நிலையில் காணப்படுவதாகவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் இது தொடர்பில் பல முறைப்பாடுகளை தெரிவித்ததை அடுத்து, இன்று கொழும்பு வடக்கு பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் செய்து  நிலைமைகளை ஆராய்ந்தப்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்மாடி குடியிருப்பு புனரமைப்பு

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தொடர்மாடி குடியிருப்பு புனரமைப்பு தொடர்பில் கடந்த அரசாங்கத்தில் கோரப்பட்ட டெண்டர்களில் அதிகமான தொகை குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர். அதனாலே அவற்றை புனரமைப்பு செய்ய முடியாமலுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் முறையற்ற திட்டத்தில் அவசரமாக கட்டப்பட்ட பல தொடர்மாடிகள் இருக்கின்றன. அவற்றில் மக்களை எவ்வித திட்டங்களும்  இல்லாமல் குடியேற்றியுள்ளனர்.

இதனால் மக்கள் பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளனர். கழிவுகள் நிறைந்து வழிதல் மற்றும் போதைப் பொருள் பாவிப்பவர்களின் அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளை நாம் படிப்படியாக தீர்க்கவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். 

 

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

NO COMMENTS

Exit mobile version