Home இலங்கை சமூகம் நல்லையம்பதி அமர்ந்த அலங்கார கந்தனின் பதினெட்டாம் நாள் இன்று

நல்லையம்பதி அமர்ந்த அலங்கார கந்தனின் பதினெட்டாம் நாள் இன்று

0

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் பதினெட்டாம் நாள் இன்றாகும்.

பதினெட்டாம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள் இன்று (15) காலை 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளன.

இதன்போது வசந்த மண்டப பூஜையுடன் விசேட ஆராதனைகள் இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் உள்வீதியுலா வருவார்.

ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை அருணகிரிநாதர் உற்சவமும், நாளை (16) காலை சூர்யோற்சவமும் மாலை கார்த்திகை உற்சவமும், 17ஆம் திகதி காலை சந்தானகோபாலர் உற்சவமும் மாலை கைலாசவாகன திருவிழாவும், 18ஆம் திகதி காலை கஜவல்லி மஹாவல்லி உற்சவமும் மாலை வேல்விமானமும், 19ஆம் திகதி காலை தண்டாயுதபாணி உற்சவமும் மாலை ஒருமுகத் திருவிழாவும், 20ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், 21ஆம் திகதி தேர் திருவிழாவும் 22ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ நிகழ்வுகளை உங்கள்
IBC Tamil TV,  LankaSri News மற்றும் IBC Tamil News ஆகிய YouTube தளங்களில் நேரலையாக காண முடியும்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா

https://www.youtube.com/embed/D0DSJWF6K8g

NO COMMENTS

Exit mobile version