Home இலங்கை சமூகம் நல்லூர் கந்தனின் தெண்டாயுதபாணி உற்சவம் இன்று

நல்லூர் கந்தனின் தெண்டாயுதபாணி உற்சவம் இன்று

0

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் இருபத்திரண்டாம் நாள் இன்றாகும்.

இருபத்திரண்டாம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள் இன்று (19) காலை 6.45 மணியளவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் தெண்டாயுதபாணி உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.

இதன்போது வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதியுலா வந்ததுடன் வெளிவீதியுலா வலம் வந்தார்.

ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்று (19) காலை தெண்டாயுதபாணி உற்சவம் இடம்பெறுவதுடன் மாலை ஒருமுகத் திருவிழாவும், நாளை (20) சப்பரத் திருவிழாவும், 21ஆம் திகதி தேர் திருவிழாவும் 22ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ நிகழ்வுகளை உங்கள்
IBC Tamil TV,  LankaSri News மற்றும் IBC Tamil News ஆகிய YouTube தளங்களில் நேரலையாக காண முடியும்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம்

https://www.youtube.com/embed/K9lDlz9c80o

NO COMMENTS

Exit mobile version