Home இலங்கை அரசியல் மகிந்தவின் உரிமைகளை மீட்க நாமல் புதிய பாதையில்!

மகிந்தவின் உரிமைகளை மீட்க நாமல் புதிய பாதையில்!

0

முன்னாள் ஜனாதிபதிகளின் சட்டவிரோத சலுகைகளை நீக்குவதற்கான அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள ராஜபக்ச தரப்பு, வேறு வழிகளைத் தேடுவதாக அரசியல் தரப்புகளில் பேசுபொருளாகியுள்ளது.

இதன்படி நேற்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு சொகுசு மாளிகையை வழங்க பிக்குகள் குழு முன்வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இருப்பினும், அவர்களில் எந்த பிக்குகள் குழு முன்னிலை வகித்தனர் என்பதை வெளிப்படுத்தாமல் நாமல் கவனமாக இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்வைக்கப்பட்ட சட்டமூலம்

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்துக்கு எதிரான சட்ட நடவடிக்கையில் இணைவதாக ரணில் விக்ரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவும் ஆரம்பத்தில் அறிவித்திருந்தனர்.

இந்த விடயத்தில் அவர்கள் தனித்தனியாக விவாதங்களை நடத்தியதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இருப்பினும், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சட்டமூலத்தை எதிர்க்காததால், ராஜபக்ச மற்றும் அவரது குழுவின் திட்டங்கள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version