Home இலங்கை சமூகம் இலங்கையின் இளம் தேசிய பேஸ்பால் வீரர் விபத்தில் உயிரிழப்பு

இலங்கையின் இளம் தேசிய பேஸ்பால் வீரர் விபத்தில் உயிரிழப்பு

0

இலங்கையின் (Sri Lanka) பிரபல பேஸ்போல் இளம் வீரர் கேஷான் மதுஷங்க (Keshan Madhushanka) உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (22) இடம்பெற்ற வாகன விபத்திலேயே கேஷான் மதுஷங்க உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேஷான் மதுஷங்க, கலேவெல மத்திய கல்லூரியின் மாணவர் ஆவார்.

தேசிய அணி

அண்மையில் சீனாவில் (China) நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 15 வயதிற்குட்பட்ட தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில் கேஷான் மதுஷங்கவின் மறைவுக்கு பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version