ஜனாதிபதியால் அமைக்கப்பட்டுள்ள தேசிய அளவிலான பேரிடர் முகாமைத்துவ குழு நாளை(10) இரண்டாவது நாளாகவும் கூடவுள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் வெளிநாட்டு உதவிகளை முறையாக
ஒருங்கிணைத்து விநியோகிப்பதை உறுதி செய்வதற்காக, பாதுகாப்பு பிரதி அமைச்சர்
அருண ஜெயசேகர தலைமையிலான எட்டு பேர் கொண்ட இந்தக் குழு ஜனாதிபதியால்
அமைக்கப்பட்டுள்ளது.
நிவாரண விநியோகம்
பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் வெளிநாட்டு
உதவிகள் மற்றும் நன்கொடைகள் முறையாக நிர்வகிக்கப்படும் செயல்முறை மூலம்
விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதே குழுவின் நோக்கமாகும்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சம்பந்தப்பட்ட பிரதேச மற்றும்
மாவட்ட செயலகங்கள் மற்றும் கிராம சேவையாளர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள்
மற்றும் தகவல்களின் அடிப்படையில் நிவாரண விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று
பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
