Home இலங்கை சமூகம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட நெடுந்தாரகை பயணிகள் படகு

உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட நெடுந்தாரகை பயணிகள் படகு

0

யாழ். நெடுந்தீவில் உள்ள நெடுந்தாரகை பயணிகள் படகை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வடக்கு மாகாண
ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

இதற்கமைய, சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு நேற்று (19.09.2024) தனது
சேவையை ஆரம்பித்துள்ளது.

படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளை தொடர்ந்து
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸால், வீதி அபிவிருத்தி அதிகார
சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு உத்தியோகப்பூர்வமாக
கையளிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் சேவை

நெடுந்தாரகை பயணிகள் படகின் திருத்தப் பணிகளுக்காக துரித நடவடிக்கையை
மேற்கொண்ட ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி செயலகத்திற்கும், துறைசார் அமைச்சுக்கும்
இதன்போது ஆளுநர் நன்றியை தெரிவித்துள்ளார்.

தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை
மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர்
கூறியுள்ளார்.

பயணிகள் சேவையை இன்று முதல் ஆரம்பித்துள்ள நெடுந்தாரகை படகு தினமும்
நெடுந்தீவில் இருந்து ஒரு தடவை குறிகட்டுவான் இறங்குத்துறைக்கு பயணிக்க
உள்ளது. நெடுந்தாரகை படகில் ஒரு தடவையில் 80 பேர் பயணிக்க முடியும்.

Source: https://tamilwin.com/article/neduntharagai-ferry-officially-inaugurated-1726787621

NO COMMENTS

Exit mobile version