நெடுந்தீவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுழற்சிமுறை மின்சார
விநியோகத்தினால் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் பதிக்கப்படுவதாக
தெரிவிக்கப்படுகின்றது.
மின்தடை
இந்நிலையில் நேற்று (10) மாலை 6.20 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, காயமடைந்த நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வந்தபோதும் மின்தடை
காரணமாக டோர்ச்லைற் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் காரணமாக வைத்தியசாலையின் நடவடிக்கைகள் பதிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.
