Home இலங்கை சமூகம் யாழ்.செம்மணியில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புத் தொகுதிகள்!

யாழ்.செம்மணியில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புத் தொகுதிகள்!

0

செம்மணி – சித்தப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றையதினம்(2) மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியில் நான்கு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித
எலும்புக்கூட்டு தொகுதிகளில் 05 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 13 ஆவது நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில்,
52 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அகழ்வு பணிகள்

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல்
அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித
புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள
நிலையில், இன்றைய தினம் 28 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

 இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 13 ஆவது நாட்களாக
முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் வரையில் 52 எலும்பு கூட்டு
தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

எலும்புத் தொகுதிகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 37
நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 05 எலும்பு கூட்டு
தொகுதியுடனுமாக 117 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 126 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்
காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version