Home இலங்கை அரசியல் அதிபர் தேர்தலில் ரணிலை வெற்றியடையச் செய்ய புதிய திட்டம்

அதிபர் தேர்தலில் ரணிலை வெற்றியடையச் செய்ய புதிய திட்டம்

0

சிறிலங்காவின் (Sri Lanka) எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வெற்றிக்காக கொழும்பு (Colombo) மாவட்டத்தில் ஆயிரத்து இருநூற்றி ஏழு அலுவலகங்கள் பத்து நாட்களுக்குள் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளருமான ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake)  தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவை வெற்றியடையச் செய்வதற்கும் ஏனைய கட்சிகளுடன் ஒன்றிணைந்து இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

 

தேர்தல் பேரணிகள்

அடுத்த அதிபர் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க போட்டியிட இன்னும் 100 நாட்கள் அவகாசம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி கணக்கிட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.

அண்மையில் சிறிகொத்தாவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அலுவலகக் கட்டுமானப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாகவும், அடுத்த மாதம் முழுவதும் தினமும் தேர்தல் பேரணிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/new-plan-to-ranil-win-the-sl-presidential-election-1720171948

NO COMMENTS

Exit mobile version