வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை வடக்கு மாகாண பிரதம செயலாளராக
நியமிக்கப்பட்ட தனுஜா முருகேசன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடனது இன்று (27) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
கடமைகள் பொறுப்பேற்பு
வடக்கு மாகாண பிரதம செயலாளராகக் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின்
செயலாளரிடமிருந்து நியமனம் பெற்ற தனுஜா முருகேசன், கைதடியிலுள்ள
வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் இன்று காலை கடமைகளை
உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
