Home இலங்கை சமூகம் பொதுத் தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு: செய்திகளின் தொகுப்பு

பொதுத் தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு: செய்திகளின் தொகுப்பு

0

பொதுத் தேர்தல் தொடர்பில் சகல மாவட்ட அலுவலகங்களிலும் உள்ள தேர்தல் உதவி
ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் மற்றும் சகல தெரிவத்தாட்சி அதிகாரிகளுடனான
விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பானது எதிர்வரும் சனிக்கிழமை (28) தேர்தல் செயலாளர்
அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல்.
ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கிடைத்த அனுபவம்,
பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவும் அடுத்த
பொதுத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி நிறைவு செய்வதற்கான ஒழுங்கு விதிகள்
குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு…..

Source: https://tamilwin.com/article/news-collection-today-tamilwin-lankasiri-1727423060

NO COMMENTS

Exit mobile version