Home இலங்கை அரசியல் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுவிட்ட இலங்கையின் அடுத்த ஜனாதிபதி : அமைச்சரின் தகவல்

ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுவிட்ட இலங்கையின் அடுத்த ஜனாதிபதி : அமைச்சரின் தகவல்

0

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) ஏற்கனவே மக்களால் தெரிவு செய்யப்பட்டு விட்டார் என்று  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு இன்று களனி பகுதியில் இடம்பெற்றது. 

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டை மீட்க ரணிலால் மட்டுமே முடியும்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேர்தலை இலக்கு வைத்து அரிசி விநியோகம் செய்யவில்லை, பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்டவர்கள் இந்த திட்டத்தால் பயனடைகின்றனர்.

நாங்கள் தேர்தலை இலக்கு வைத்து இதை செய்யவில்லை. பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்டவர்கள் இங்கு உள்ளனர்.

பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க அவரால் தான் முடியும் என்பதால் மக்கள் ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக  தேர்ந்தெடுத்து விட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/next-president-of-sri-lanka-1713703532

NO COMMENTS

Exit mobile version