யாழ்ப்பாணம்- நாவற்குழியில் நைஜீரியாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது சாவகச்சேரி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
விசா இன்றி நாவற்குழி பகுதியில் தங்கி இருந்த குற்றச்சாட்டில் இந்த நைஜீரிய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
