Home இலங்கை சமூகம் கடற்றொழில் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

கடற்றொழில் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

0

கடற்றொழில் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்தும் கடற்றொழிலாளர்கள் பல்வேறு
பாதிப்புகளுக்கு உள்ளாக்கி வருவதாக அந்த அமைப்பின் வட மாகாண பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம்
தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (15)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத நடவடிக்கைகள்

அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்றொழில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தாமல் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள்
தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றது.

இதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

கடல் அட்டை பண்ணை
அமைப்பதற்கு யாருக்காவது அனுமதி வழங்கப்படுகின்றபோது உரிய ஆய்வுகளுக்கு
உட்படுத்தி வழங்கப்பட வேண்டும் என்றும் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version