Home இலங்கை சமூகம் நல்லூரில் உள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை

நல்லூரில் உள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை

0

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்துக்கு தடை
விதிக்குமாறு கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் ஆணையாளருக்கு, தமிழ்த்தேசிய மககள்
முன்னணி சார்பில் நேற்றையதினம் கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மாமிச உணவகம்

“நல்லூர் ஆலயத்தின் சூழமைவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாமிச உணவகம், சைவ
மக்களின் மனங்களுக்கும், ஆன்மீக உளவியலுக்கும் மதிப்பளிக்காமல் நடத்தப்படுவது
குறித்து மக்கள் எமக்கு முறையிட்டு வருகின்றார்கள்.

சைவ மக்களின் ஆன்மீக உளவியலுக்கு இடையூறை ஏற்படுத்தும் குறித்த மாமிச
உணவகத்தில் மாமிச உணவு தயாரிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றாகத் தடை
விதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version