Home இலங்கை சமூகம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

0

எதிர்வரும் மாதத்தில் அத்தியாவசிய வேலைகளை தவிர வெளிநாடு செல்வதை தவிர்க்குமாறு அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளனர்.

தேர்தல் பிரசார வேலைத்திட்டத்திற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த முடிவின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற கூட்டங்கள் 

அத்தோடு, அடுத்த வார நாடாளுமன்றக் கூட்டங்களும் ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வரும் 21 ஆம் திகதி மட்டும் நாடாளுமன்ற கூட்டங்கள் நடைபெறும்.

இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பிரதேசங்களில் தங்கி தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் முடிந்தவரை பங்களிக்க வேண்டும் என்றும் கட்சித் தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anurakumara Dissanayake) ஆகியோரின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரச்சாரக் கூட்டங்கள் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/notice-to-members-of-parliament-going-abroad-1724051426

NO COMMENTS

Exit mobile version