Home இலங்கை சமூகம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ள பல தொடருந்து சேவைகள்!

திடீரென இரத்து செய்யப்பட்டுள்ள பல தொடருந்து சேவைகள்!

0

தொடந்துவ மற்றும் பூஸா இடையேயான கடலோர க​ரையோர மார்க்கத்தின் பல தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரியா அறிவித்துள்ளார்.

க​ரையோர மார்க்கத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (24) இவ்வாறு பல தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து சேவைகள் இரத்து

அதன்படி, நாளை 24.08.2025 அன்று இரத்து செய்யப்படவுள்ள தொடருந்து சேவைகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

01. காலி தொடருந்து நிலையத்திலிருந்து காலை 05.15 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்பட திட்டமிடப்பட்ட தொடருந்து (எண் 8319) இரத்து செய்யப்படவுள்ளது.

02. மருதானை தொடருந்து நிலையத்திலிருந்து நண்பகல் 12.10 மணிக்கு காலிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட தொடருந்து (எண் 8788) இரத்து செய்யப்படவுள்ளது.

திருத்தப்பட்ட தொடக்க நேரங்கள்

24.08.2025 அன்று திருத்தப்பட்ட தொடக்க நேரங்களுடன் இயக்கப்படும் தொடருந்துகள்.

01. காலி தொடருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 05.00 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்பட திட்டமிடப்பட்ட தொடருந்து எண் 8327 சமுத்திரதேவி காலி தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 மணி நேரம் தாமதமாக காலை 06.30 மணிக்கு பயணத்தைத் தொடங்கும்.

02. காலி தொடருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 04.10 மணிக்கு கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும் தொடருந்து எண் 8320, காலை 08.50 மணிக்கு காலி தொடருந்து நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கும். 

NO COMMENTS

Exit mobile version