Home இலங்கை சமூகம் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளாத சிறுவர்கள் : வெளியான அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளாத சிறுவர்கள் : வெளியான அறிவிப்பு

0

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இதனடிப்படையில், இம்மாதம் முழுவதும் கட்டணம் செலுத்தாமல் உரிய பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து பிரதேச செயலக மட்டத்தில் கடமையாற்றும் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு உத்தியோகத்தர்கள் குறித்த சேவையை முன்னெடுக்கவுள்ளனர்.

தேவையான உதவி

இவ்வாறு சான்றிதழ் இல்லாத சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை அவர்கள் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் கணிசமான எண்ணிக்கையிலான சிறுவர்கள் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாமல் இருப்பதாகக் இதன்மூலம் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version