நுகேகொடை பேரணி தொடர்பிலும் தற்போதுவரை பேசப்பட்டுவரும் நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த பேரணியினால் எந்தவொரு நன்மையும் இல்லையென்று நினைத்தாலும், அதிலும் நன்மையடைந்தவர் ரணிலாக தான் பார்க்கப்படுகின்றார்.
ஏனெனில் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணையும் என்று பேசப்பட்டு வந்தநிலையில் நுகேகொடை பேரணியில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டு நாமலிற்கு ஆதரவாக பேசுவதை காணக்கூடியதாக இருந்தது.
அநுரகுமார திசாநாயக்க குறித்த பேரணியை சவாலாக நோக்காவிட்டாலும், சஜித் பிரேமதாஸ அதனை சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..
