நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா எடிம்புரோ பகுதியில் முழு வீதியும் தாழிறங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த வீதி இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஒருவழிப்போக்குவரத்து பாதைக்காக செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் அடை மழை
இதன்படி மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக பல இடங்களில் பாரிய அளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதன் விளைவாக பிரதான வீதிகளின் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
