Home இலங்கை கல்வி சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

0

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (சாதாரண தர) பரீட்சைப் பெறுபேறுகள் இணையவழியில் மட்டுமே வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே ஒரு அறிக்கையின் ஊடாக குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை

அதன் பிரகாரம் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ்களைப் பெறுவதற்காகப் பரீட்சைகள் திணைக்களத்திற்கு நேரில் வருகை தருவதைத் தவிர்க்குமாறு பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் https://certificate.doenets.lk/certificate என்ற இணைப்பின் மூலம் இணையவழியில் விண்ணப்பித்து, தபால் மூலம் பரீட்சைப் பெறுபேறுகளை தங்கள் வீடுகளுக்குப் வரவழைத்துக்கொள்ளலாம் என்றும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/ol-examination-results-to-be-released-online-only-1782435415

NO COMMENTS

Exit mobile version