Home இலங்கை சமூகம் திருகோணமலையில் வயலில் மயங்கி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலையில் வயலில் மயங்கி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

0

திருகோணமலை (Trincomalee) மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவெளி குளம் வயலில் வேலை
செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (20.04.2024) மதியம் இடம்பெற்றுள்ளது.

மூதூர் – பாலத்தடிச்சேனை கிராமத்தில் வசித்து வரும் 3 பிள்ளைகளின் தந்தையான
சூரியமூர்த்தி சுதாகரன் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஈரானுக்கு ஆதரவான இராணுவத் தளம் மீது மிகப்பெரும் தாக்குதல்

உடற்கூற்றுப் பரிசோதனை

இந்நிலையில் மயக்கமுற்று விழுந்த நபரை உடனடியாக மூதூர்
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக
திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக இந்தச் சம்பவம்
இடம்பெற்றிருக்கலாம் எனவும், வெயிலில் நின்று வயல் வேலை செய்கின்றவர்கள்
வெயிலின் உச்சமான நேரங்களில் வயல் வேலை செய்வதைத் தவிர்த்துக்கொள்வதன் மூலம்
தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.

இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண் நளினி

இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version