Home முக்கியச் செய்திகள் கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை: வெளியான புதிய தகவல்

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை: வெளியான புதிய தகவல்

0

புதிய இணைப்பு

கொழும்பு  – புறக்கோட்டை பகுதியில் இன்று (05.10.2024) அதிகாலை பதிவான கொலைச் சம்பவம் தனிப்பட்ட  தகராறு காரணமாகவே இடம்பெற்றதாக காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கொழும்பு – 12 பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய சந்தேக நபர்  ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

கொழும்பு (Colombo), இரண்டாம் குறுக்குத் தெரு, ரெக்லமேஷன் வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்படடுள்ளார்.

குறித்த கொலைச் சம்பவம் இன்று (05.10.2024) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை விசாரணை

இதன்போது, மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.   

https://www.youtube.com/embed/VNArW9CcVMA

Source: https://ibctamil.com/article/one-killed-attacked-with-a-sharp-weapon-in-colombo-1728104895?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version