Home இலங்கை குற்றம் கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

0

கொழும்பு (Colombo) தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அருப்பிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று (19.08.2024) ஞாயிற்றுக்கிழமை முச்சக்கரவண்டிகளை பழுது
பார்க்கும் இடமொன்றில் இடம்பெற்றுள்ளது.

45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள்

கொலை செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கடனாகப் பணத்தைப்
பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்ட
சந்தேகநபருக்கு அந்தப் பணத்தைத் திருப்பித் தராததால் இருவருக்கும் இடையில்
வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் எல்லை மீறியதால் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று
பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version