சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது இன்று(18.12.2025) அதிகாலை தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட கனரக வாகனம் பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற காரணத்தினால் துப்பாக்கிச் சூடு
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கனரக வாகனம் குடை சாய்ந்துள்ளது.
இதன்போது, கனரக வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
