Home இலங்கை சமூகம் ஒன்பது மாத காலப்பகுதியில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் இறக்குமதி

ஒன்பது மாத காலப்பகுதியில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் இறக்குமதி

0

கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் வரை மொத்தம் 200,026 வாகனங்கள்
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழு
தெரிவித்துள்ளது.

அவற்றில் 154,537 வாகனங்கள் ஏற்கனவே சுங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கத் திணைக்களம் ரூ. 429 பில்லியன் வருமானம்

விடுவிக்கப்பட்ட வாகனங்களில் 98,923 மோட்டார் சைக்கிள்கள், 40,323 மோட்டார்
வாகனங்கள், 9,025 முச்சக்கர வண்டிகள், 5,368 வணிக வாகனங்கள் மற்றும் 898
வேன்கள் மற்றும் பேருந்துகள் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுங்கத் திணைக்களம் ரூ. 429 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் வாகன இறக்குமதிக்காக 30,594 கடிதங்கள்
திறக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு 1,491 மில்லியன் அமெரிக்க
டொலர்கள் என்றும் அந்த குழு மேலும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version