Home இலங்கை சமூகம் கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

0

கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளுக்கான துண்டு சீட்டுகள் வழங்கும் பணிகள் மட்டுப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த பணிகள் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

இதன்படி, இந்த சேவை குறித்த நாட்களில் நண்பகல் 12 மணி வரை மாத்திரமே முன்னெடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், ஒரு நாள் சேவையின் கீழ் முன்னெடுக்கப்படும் 24 மணி நேரக் கடவுச்சீட்டு வழங்கும் சேவையானது குறித்த மூன்று நாட்களிலும் இடம்பெறாது எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version